47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பல்லடத்தில் ஊழல் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பல்லடம் பத்திரப் பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் முறைகேட்டை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  

News image
பல்லடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக்கட்சியினர்.
Updated On :19 அக்டோபர் 2020, 6:12 am

DIN

பல்லடம் பத்திரப் பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் முறைகேட்டை கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதி அனைத்துக் கட்சி கட்சி சார்பில் பல்லடம் ராயர்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதனின் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தொடர்புடையவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத்துறை உயரதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை ஏதுமில்லை. 

அதனால் பல்லடம் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் முன்பு  ஊழல் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் ராஜேந்திரகுமார், ராஜசேகரன் (திமுக), ஈஸ்வரமூர்த்தி, மணிராஜ் (காங்கிரஸ்), முத்துரத்தினம், மு.சுப்பிரமணியம்,பாலசுப்பிரமணியம் (மதிமுக), ப.கு.சத்தியமூர்த்தி, சாகுல்அமீது(கம்யூணிஸ்ட்), சுப்பிரமணியம், முத்துகுமார் (தமாகா)காளப்பட்டி பொன்னுசாமி, பாலசுப்பிரமணியம் (மதசார்பற்ற ஜனதா தளம்), ரங்கசாமி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ஈசன்,பழனிசாமி(விவசாய சங்கங்கள்) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.