திருப்பூர், தாராபுரத்தில் பரவலாக மழை
திருப்பூர், தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.


திருப்பூர், தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
இதில், திருப்பூர் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், புஷ்பா ரவுண்டானா, புதிய பேருந்து நிலையம், ஊத்துக்குளி சாலை, மங்கலம் சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 7 மணி வரையில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஊத்துக்குளி ரயில்வே பாலம், புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தாராபுரத்தில்....அதே போல தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் தொடங்கிய மழையானது மாலை 6 மணி வரையில் 2 மணி நேரம் நீடித்தது. இந்தமழை காரணமாக தாராபுரம் பெரிய கடை வீதி, பூக்கடை கார்னர், சின்னகடை வீதி, அரசமரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...