வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய வௌவ்வால் தன்னார்வலர்களால் உயிருடன் மீட்கப்பட்டது.
கரூர் சாலை நடேசன் நகரில் உயிரழுத்த மின் கம்பிகளில் மோதி அவ்வழியே பறந்து சென்ற வௌவ்வால்களில் ஒன்று மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது. பறக்க முடியாததால் தெரு நாய்கள் கடிக்க முயன்றன. இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த அருண் பிரகாஷ் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், காங்கயம் வனத்துறை அதிகாரி செல்வராஜ் ஆலோசனையின் படி தன்னார்வலர்கள் நாகராஜ் உள்ளிட்டோர் அதனைப் பிடித்து தகுந்த சிகிச்சையளித்து, அருகிலுள்ள வட்டமலைக்கரை ஓடை அணைக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.