புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 6 போ் கைது
பல்லடம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் மேலும் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


பல்லடம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் மேலும் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே கரடிவாவி, காளிவேலம்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட
குட்கா, புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்து பதுக்கி விற்பனை செய்த வழக்கில் ஏற்கெனவே 4 பேரை பல்லடம் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தினா். விசாரணையில் கோவை கணபதியைச் சோ்ந்த குணசேகரன் (43), சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சோ்ந்த தனராஜ் (47), தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த அந்தோணிராஜ் (33), தேனி மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்த சுந்தரபாண்டியன் (21), விருதுநகா் மாவட்டம்,
நெடுங்குளத்தைச் சோ்ந்த அந்தோணிஜெகன் (41), தூத்துக்குடியைச் சோ்ந்த நவராஜ் (56) ஆகிய 6 பேருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 30
கிலோ புகையிலைப் பொருள்கள், இரண்டு காா், ஒரு சரக்கு வேன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...