அவிநாசியை நகராட்சியாக்கக் கோரி பாஜகவினர் கையெழுத்து இயக்கம்
அவிநாசியை நகராட்சியாக அறிவிக்கக் கோரி பாஜகவினர் அவிநாசி பகுதியில் புதன்கிழமை மாலை கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.


அவிநாசியை நகராட்சியாக அறிவிக்கக் கோரி பாஜகவினர் அவிநாசி பகுதியில் புதன்கிழமை மாலை கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியை பாஜக மாவட்டத் தலைவர் செந்தில் வேல் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர், “அவிநாசியை நகராட்சியாக அறிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக முதல்வருக்குத் தபால் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு வகையில் போராட்டங்கள் தொடரும்” என்றார்.
மாவட்ட பொதுச் செயலாளர் கதிர்வேல், மண்டலத் தலைவர்கள் சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, கலை கலாச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் சீனிவாசன், ஊரக நகர்ப்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...