ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அந்தத் தொகையும் வழங்கப்படவில்லை. ஆகவே, தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளர் ஆர்.காளியப்பன், மார்க்சிஸ்ட் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் ஜெ.ரமேஷ் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.