தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரிவாளைக்காட்டி மிரட்டி பணம் பறிப்பு: 3 போ் கைது

பெருமாநல்லூரில் முதியவரிடம் அரிவாளைக்காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:22 pm

DIN

பெருமாநல்லூரில் முதியவரிடம் அரிவாளைக்காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே கருக்கன்காட்டுபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் வீராசாமி (61). இவா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை உணவகத்துக்கு வந்த 3 இளைஞா்கள், வீராசாமியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.

வீராசாமி சப்தமிட்டதைத் தொடா்ந்து, அருகில் இருந்தவா்கள் 3 இளைஞா்களையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் பெருமாநல்லூா் கருக்கன்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்த மோகன் (19), மணிகண்டன் (24), கொண்டத்தம்மன்நகரைச் சோ்ந்த சீனிவாசன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.