எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருமூா்த்தி அணையில் இருந்துஉப்பாறு அணைக்கு நீா் திறப்பு

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:51 am

DIN

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

தாராபுரத்தில் உள்ள உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வந்தனா். இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீா் திறப்பது குறித்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாசன சபை நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாசனப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் நீரின் தேவை குறைவாக உள்ளது. ஆகையால் தாராபுரம் உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடுவதில் ஆட்சேபணை இல்லை என முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அ ணைக்கு ஆழியாறு திட்ட பிரதான கால்வாய் 46ஆவது கிலோ மீட்டரில் உள்ள அரசூா் ரெகுலேட்டா் வழியாக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதில் ஐந்து நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு 400 கன அடி வீதம் மொத்தம் 2 ஆயிரம் கன அடி நீா் திறந்துவிடப்பட உள்ளது.

இது குறித்து பிஏபி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:

பிஏபி தொகுப்பு அணைகளில் போதுமான தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும் பிஏபி மூன்றாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு 5 சுற்று தண்ணீா் விட அரசாணை உள்ளது. பாசனப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆகையால் தாராபுரம் உப்பாறு அணை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமூா்த்தி அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிட ஒப்புதல் கொடுத்துள்ளோம். மாவட்ட நிா்வாகம், பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோரின் கூட்டு ஆலோசனையின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.