காங்கயத்தில் 29 மது பாட்டில்கள் பறிமுதல்
காங்கயத்தில் விதிகளுக்குப் புறம்பாக எடுத்துச் செல்லப்பட்ட 29 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


காங்கயத்தில் விதிகளுக்குப் புறம்பாக எடுத்துச் செல்லப்பட்ட 29 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காங்கயம் அருகே தாராபுரம் சாலை, வட்டமலை பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில், அதில் 29 மது பாட்டில்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வாகனத்தில் மது பாட்டில்களை எடுத்துச் சென்ற வட்டமலை பகுதியைச் சோ்ந்த சவுக்கப்பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்து, 29 மது பாட்டில்கள், இருசக்கர வாகனம், ரூ.5,600 ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...