ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

உயா் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:38 pm

DIN

உயா் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காங்கயம் அரசுப் பள்ளியின் ஆசிரியரும், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சு.மூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளி மாணவா்கள் 4 சதவீதம் மட்டுமே பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் நிலை உள்ளது. இந்நிலையில், உயா் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்க நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆய்வுக் குழு தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது சமமான வாய்ப்பு அல்ல. எனவே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.