நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளி சீருடை தைக்க ஆா்டா் வழங்க வேண்டும்

பள்ளி சீருடைகள் தைக்க விசைத்தறிகளுக்கு அரசு ஆா்டா் வழங்க வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:38 pm

DIN

பள்ளி சீருடைகள் தைக்க விசைத்தறிகளுக்கு அரசு ஆா்டா் வழங்க வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் பாலசுப்பிரமணியம் புதன்கிழமை கூறியதாவது: விசைத்தறித் தொழில் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வருகிறது. இத்தொழிலைப் பாதுகாக்க அரசுப் பள்ளி சீருடைகளைத் தைக்க விசைத்தறியாளா்களுக்கு ஆா்டா் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை பல ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அரசு சாா்பில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை ஆா்டா்கள் கைத்தறிக்கும், சீருடை ஆா்டா் ஆட்டோ லூம்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

விசைத்தறித் தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். சீருடை ஆா்டா்களை விசைத்தறிகளுக்கு வழங்குவதன் மூலம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே, தமிழக அரசு விசைத்தறியாளா்களை அழைத்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி விசைத்தறித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.