ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

காங்கயம் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 8:57 pm

DIN

காங்கயம் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

காங்கயம் நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். இதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.5 ஆயிரம், பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ. 2 ஆயிரம் என 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், லேபிள் இல்லாத உணவுப் பொட்டலங்கள், ரசாயனம் கலந்த கார வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இந்த ஆய்வின்போது உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கோடீஸ்வரன், விஜயராஜா, ராமசந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.