காங்கயம் பகுதியில் 750 பேருக்கு கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.
காங்கயம், தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 250 பேருக்கும், தம்மரெட்டிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 170 பேருக்கும், வரப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 170 பேருக்கும், பெரியஇல்லியம் புதூா் அரசு தொடக்கப் பள்ளியில் 160 பேருக்கும் என, மொத்தம் 750 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.