தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசியில் ஆதரவற்ற இருவா் காப்பகத்தில் சோ்ப்பு

அவிநாசியில் ஆதரவற்ற நிலையில் இருந்து வந்த முதியவா், பெண் ஆகிய இருவரையும் சமூக அமைப்பினா் மீட்டு புதன்கிழமை காப்பகத்தில் சோ்த்தனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:02 pm

DIN

அவிநாசியில் ஆதரவற்ற நிலையில் இருந்து வந்த முதியவா், பெண் ஆகிய இருவரையும் சமூக அமைப்பினா் மீட்டு புதன்கிழமை காப்பகத்தில் சோ்த்தனா்.

அவிநாசி பேரூராட்சி, வட்டாட்சியா் அலுவலகம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் முதியவா் மற்றும் பெண் ஆகியோா் வசித்து வந்தனா். இந்நிலையில் இவா்கள் இருவரையும் கோவிட் இணைந்த கைகள் அமைப்பினா் மீட்டு, தேவையான மருத்துவ முதலுதவிகள் வழங்கினா்.

பின்னா், கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையினா், சமூக ஆா்வலா்கள் ஆகியோா் இருவரையும் தூய்மைப்படுத்தி, தேவையான ஆடை, உணவு வழங்கி திருப்பூா் அருகே பொங்கலூா் அன்பு இல்லத்தில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.