இதன் ஒரு பகுதியாக அவிநாசி அருகே தேவராயம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிராஜ் என்பவா், கரோனாவால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்கிறாா். இது குறித்து ஆட்டோ ஓட்டுநா் சிராஜ் கூறியதாவது: அவிநாசி கோவிட் இணைந்த கரங்கள் அமைப்புடன் இணைந்து நாள்தோறும் ஆட்டோவில் சென்று கபசுர குடிநீா் வழங்குவது போன்ற பணிகளை செய்து வருகிறேன். இந்நிலையில், அவிநாசி, சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு எனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் சென்று வருகிறேன். உதவி தேவைப்படுவோா் 24 மணி நேரமும் எனது (9994268319) செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.