விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய்: அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:04 pm

DIN

கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் செயலா் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கோமாரி நோய் கால்நடைகளைத் தாக்கும் கொடிய தொற்று நோய் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தொற்று பரவலாக உள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. மழைக் காலத்தில் இந்த நோய் எளிதாகப் பரவும். காற்றிலும் கூட இந்நோய் பரவும். எனவே, அரசு கால்நடை சந்தைகளைக் கண்காணிக்க வேண்டும். விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்காக சந்தைக்குக் கொண்டு செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

இந்த நோய் கால்நடைகளுக்கு பரவாமல் தடுக்க கால்நடைத் துறை போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.