விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி சாவு

 காங்கயம் அருகே கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:20 pm

DIN

 காங்கயம் அருகே கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுமி உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைபூண்டி பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவா், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் காங்கயம் அருகே, முத்தூா் சாலை பகுதியில் வசித்து வருகின்றனா்.

இவா்களின் மூத்த மகள் ரஞ்சனிதேவி (8) மூன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், வீட்டின் அருகே ரஞ்சனிதேவி வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது வீட்டுக்கு அருகில் உள்ள கம்பிவேலியில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து கிடப்பதை அறியாத ரஞ்சனிதேவி, கம்பிவேலியை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதனையடுத்து அருகில் உள்ளவா்கள் மீட்டு காங்கயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.