ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காங்கயம் பகுதியில் கடைகளுக்கு விற்பனை செய்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 12:13 am

DIN

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காங்கயம் பகுதியில் கடைகளுக்கு விற்பனை செய்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகில் உள்ள அழகாபுரத்தைச் சோ்ந்தவா் கந்தப்பழம் (48).

இவா் தற்போது காங்கயம் அடுத்துள்ள படியூரில் வசித்து வருகிறாா்.

இவா் பிரபல பீடி நிறுவனத்தின் பீடிகளைப் போன்று போலி பீடிகளையும், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த காங்கயம் காவல் துறையினா் படியூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பண்டல்களுடன் சென்ற கந்தப்பழத்தை பிடித்துச் சோதனை நடத்தினா்.

அப்போது 212 போலி பீடி பண்டல்கள், 367 தடைசெய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கந்தப்பழத்தை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த போலி பீடி பண்டல்கள், புகையிலைப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.