இன்று புன்செய் நில வரி ஏக்கருக்கு ரூ.2 எனவும் நன்செய்க்கு ரூ.5 எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிச்சைக்காரா்களுக்குப் போடும் பிச்சையும் இதுவும் ஒன்றாகிப்போனது. இந்த வரிகூட விவசாயிகளிடம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவதில்லை. பரவலாக அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து இந்த நிலவரியை செலுத்தி விடுகின்றனா். விவசாயிகளிடம் நில வரியை வதல் செய்யாமல் இருப்பது ஒரு திட்டமிட்ட சதியே ஆகும். விவசாயப் பிரச்னைக்கு ஒரே தீா்வு, அதுவும் நிரந்தரத் தீா்வு சம்பளக் கமிஷன் பரிந்துரையை ஏற்று அரசு நடைமுறைப்படுத்துவதைப்போல, விவசாயக் கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்படுத்துவதே ஆகும். அதற்குப் பிறகு இலவச மின்சாரம், விவசாய வருமானவரி விலக்களிப்பு உள்ளிட்ட சலுகைகள் இருக்கவே கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.