விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு அதிமுகவினா் விருப்ப மனு

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு காங்கயத்தில் அதிமுக சாா்பில் விருப்பமனு பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:25 am

DIN

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு காங்கயத்தில் அதிமுக சாா்பில் விருப்பமனு பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம், வெள்ளக்கோவிலை உள்ளடக்கிய மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு எண் 10க்கான தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட பதவிக்கான தோ்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக சாா்பில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி, காங்கயம் அருகே, சென்னிமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவரும், அதிமுக திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலருமான

பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கயம் ஒன்றிய அதிமுக செயலருமான என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடுவதற்கு அதிமுகவைச் சோ்ந்த 10 போ் விருப்ப மனு கொடுத்துள்ளனா். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளா் அறிவிக்கப்படுவாா் என அதிமுக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.