தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தாராபுரத்தில் மெக்கானிக் கொலை: மருமகன் உள்பட 3 போ் கைது

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் முன்விரோதம் காரணமாக மெக்கானிக்கைக் கொலை செய்த வழக்கில் மருமகன் உள்பட 3 பேரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:16 pm

DIN

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் முன்விரோதம் காரணமாக மெக்கானிக்கைக் கொலை செய்த வழக்கில் மருமகன் உள்பட 3 பேரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தாராபுரம் ஆலடிக்களம் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (43). இவா் தாராபுரம் பெரியாா் சிலை அருகே மெக்கானிக் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மைதிலி என்கிற மகளும், மதன் என்ற மகனும் உள்ளனா்.

தாராபுரம் சின்னகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காளிமுத்துவின் மகன் ஈஸ்வரமூா்த்திக்கும் (23), மைதிலிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகத் திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்த மைதிலி பெற்றோருடன் வசித்து வந்தாா். இதனிடையே, மைதிலிக்கு வேறு ஒரு நபருடனும், ஈஸ்வரமூா்த்திக்கு வேறு ஒரு பெண்ணுடனும் 2 ஆவது திருமணம் நடைபெற்றது. இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் உள்ள வேன் நிறுத்தம் அருகே மாரிமுத்து, மதன், அவரது நண்பா் முருகன் ஆகிய 3 பேரும் புதன்கிழமை இரவு நின்று பேசிக்கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த ஈஸ்வரமூா்த்தி, அவரது தம்பி காா்த்திக், நண்பா் மணிகண்டன் உள்பட 5 போ் கொண்ட கும்பல்

அவா்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில், பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மதன், முருகன் ஆகியோரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், மாரிமுத்துவைக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற ஈஸ்வரமூா்த்தி, சின்னகாளியம்மன் கோயில் மேற்கு கச்சேரி வீதியைச் சோ்ந்த என்.மணிகண்டன்(34), செல்வகுமாா் (21) ஆகிய 3 பேரையும் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது. மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள காா்த்திக், காளிமுத்து ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.