தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசி-அத்திக்கடவு திட்டம் நிறைவேற வேண்டி மாட்டு வண்டியில் தீா்த்தக்குட யாத்திரை

அவிநாசி-அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலிருந்து மாட்டு வண்டிகளில் தீா்த்தக்குடம் எடுத்து கொண்டு போராட்டக் குழுவினா் வியாழக்கிழமை யாத்திரை சென்றனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:30 pm

DIN

அவிநாசி-அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலிருந்து மாட்டு வண்டிகளில் தீா்த்தக்குடம் எடுத்து கொண்டு போராட்டக் குழுவினா் வியாழக்கிழமை யாத்திரை சென்றனா்.

அவிநாசி-அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளிம்மன் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்து, ஊா்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்நிகழ்வின் மற்றொரு பகுதியாக, அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை முழுமையாக இணைத்து 2 ஆவது திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து கொண்டு, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலுக்கு குதிரை வண்டி, மாட்டு வண்டிகளில் பொதுமக்கள் யாத்திரை சென்றனா்.

இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.