இதன்படி, திருமுருகன்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் நகா்மன்ற அலுவலகத்தை, நகராட்சிக்கு உள்பட்ட ராக்கியாபாளையம் செல்லும் சாலையில் திடக்கழிவு மேலாண்மை அமைந்துள்ள இடத்துக்கு மாற்றுவதற்காக மண் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதையறிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, அதிமுகவைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சித் தலைவா், ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். குறிப்பாக நகராட்சி அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய பொதுமக்கள், நகா்மன்ற உறுப்பினா்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் முடிவு செய்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.