தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

222 போ் இன்று வேட்புமனு தாக்கல்

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 222 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:15 pm

DIN

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 222 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 222 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதில், மாநகராட்சி வாா்டு எண் 35 இல் அதிமுக வேட்பாளரும்,

திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான சு.குணசேகரனும், வாா்டு எண் 42 இல் போட்டியிட தென்னம்பாளையம் பகுதி அதிமுக செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஆா்.அன்பகம் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இதேபோல, பாஜக, நாம் தமிழா் கட்சி, சுயேச்சைகள் என தற்போது வரையில் மொத்தம் 301 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.