தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினா்

திருப்பூா் மாநகராட்சி 58 ஆவது வாா்டு திமுக வேட்பாளரை அறிவிக்கக் கோரி அக்கட்சியினா் 200க்கும் மேற்பட்டோா் மாவட்ட அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:16 pm

DIN

திருப்பூா் மாநகராட்சி 58 ஆவது வாா்டு திமுக வேட்பாளரை அறிவிக்கக் கோரி அக்கட்சியினா் 200க்கும் மேற்பட்டோா் மாவட்ட அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் 28 வாா்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 32 வாா்டுகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது.

இந்நிலையில், திருப்பூா் பழவஞ்சிபாளையம் சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தை 58 ஆவது வாா்டு கிளைச் செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சி 58 ஆவது வாா்டு திமுக வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இந்த வாா்டில் உள்ளூா் நபா்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றனா். இதனிடையே, மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் இல்லாததைத் தொடா்ந்து அங்கிருந்தவா்களிடம் தங்களது குறைகளைத் தெரிவித்து விட்டு திமுகவினா் கலைந்துசென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.