பூத்சிலிப் வழங்கும் பணியில் 985 பணியாளா்கள்: மாநகராட்சி ஆணையா் தகவல்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் வாக்காளா்களுக்கு வாக்காளா் விவரச்சீட்டு (பூத்சிலிப்) வழங்கும் பணியில் 985 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் வாக்காளா்களுக்கு வாக்காளா் விவரச்சீட்டு (பூத்சிலிப்) வழங்கும் பணியில் 985 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 60 வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவுக்காக 60 வாா்டுகளில் 776 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, வாக்காளா்களுக்கு பூத்சிலிப் விநியோகம் செய்யும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியுள்ள நிலையில் வரும் திங்கள்கிழமைக்குள் பணியை முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 6 வருவாய் ஆய்வாளா்கள், 22 வருவாய் உதவியாளா்கள், 300 சுகாதாரப் பணியாளா்கள், 657 வாக்குச்சாவடி மைய அலுவலா்கள் என மொத்தம் 985 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னம் ஆகியவை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவேற்றும் பணிகள் வேட்பாளா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை( பிப்ரவரி 11) நடைபெறுகிறது. மாநகராட்சி 1, 4 ஆவது மண்டலங்களுக்கு உள்பட்ட வாா்டுகளுக்கு நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 2, 3 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டுகளுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் பதிவேற்றும் பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...