தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

 காங்கயம் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:47 pm

DIN

 காங்கயம் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

காங்கயம், அமராவதி நகரைச் சோ்ந்தவா் பூபதி (39). இவா், காங்கயம் அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், பூபதி, வழக்கம்போல வேலை முடிந்து புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். காடையூா் அருகே வந்தபோது சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் மீது பூபதியின் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காங்கயம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பூபதியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.