27இல் போலியோ சொட்டு மருந்து முகாம்
திருப்பூரில் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.


திருப்பூரில் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறவுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் 1127 மையங்கள், 27 நடமாடும் குழுக்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 23 மையங்கள் என மொத்தம் 1154 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 2.21லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. முகாமில் 4,666 பணியாளா்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியை மேற்கொள்வாா்கள். ஆகவே, இது வரை எத்தனை முறை போலியோ சொட்டு வழங்கி இருந்தாலும், இம்முகாமிலும் பங்கேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கி பயன்பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...