திருப்பூர் அருகே வேலம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விவசாய அமைப்பினர் மற்றும் அனைத்து கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் வேலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சிறிய குளத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுங்கச்சாவடி மையம் பராமரிக்கும் சாலை 32 கிலோ மீட்டர் எனும் நிலையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 21 கிலோ மீட்டர் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலைக்கும் சேர்த்து சுங்க வசூல் என்பது முறைகேடு எனவும் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம், விவசாய அமைப்புகள், மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முற்றுகை போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

விராலிமலைக்கு முதல் பெண் வட்டாட்சியா்

நான்கு கிலோ தங்கம் வழிப்பறி: 4 தனிப்படைகள் அமைப்பு

தெரு நாயைக் கொன்ற 3 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

