தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

திமுக அரசை கண்டித்து அவிநாசியில் பாஜகவினர் உண்ணாவிரதம்

திமுக அரசைக் கண்டித்து, பாஜகவினர் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோர்
Updated On :5 ஜூலை 2022, 10:44 am

DIN

அவிநாசி: திமுக அரசைக் கண்டித்து, பாஜகவினர் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்வேல் வகித்தார். மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே. நாகராஜ், முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.கே. கார்வேந்தன் ஆகியோர் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினர்.

இதில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட வேண்டும். லாக்கப் மரணத்தை தடுக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குதல் ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

போராட்டத்தில் பாஜக மாவட்ட, மாநில, ஒன்றிய நகர, அணிப்பிரிவு நிர்வாகிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.