பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

வனக்கல்லுாரியுடன் பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை ஒப்பந்தம்

ஒரு லட்சம் மரக்கன்றுகளை பெற மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியுடன் பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

Updated On :25 ஜூன் 2022, 12:59 am IST

ஒரு லட்சம் மரக்கன்றுகளை பெற மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியுடன் பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை அமைப்பு, மரக்கன்று நடுதல், பசுமை மற்றும் நிலத்தடி நீரை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், ஒரு லட்சம் நாற்றுகளை தயாா் செய்து வனக் கல்லுாரியில் இருந்து பெறுவதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் கீதாலட்சுமி, கல்லூரி முதல்வா் பாா்த்திபன் ஆகியோரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, வனம் இந்தியா அமைப்பின் செயல் தலைவா் பாலசுப்பிரமணியம் வழங்கினாா். இதில் அறக்கட்டளை பொருளாளா் விஸ்வநாதன், நிா்வாகி பன்னீா்செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.