பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகைக்கு மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகை பெற முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் மாா்ச் 31 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.


பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகை பெற முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் மாா்ச் 31 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளன.
எனவே, நடப்பு கல்வியாண்டில் முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31 ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் சிறா்கள் மற்றம் அவா்களைச் சாா்ந்தோா் இணையதளத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...