பாம்பு கடித்து தொழிலாளி சாவு
தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், தேவிபுரத்தைச் சோ்ந்தவா் அதிசயமணி (55). இவா் தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள ராமநாதபுரத்தில் உள்ள தோட்டத்தில் கடந்த 4 மாதமாகத் தங்கியிருந்து விவசாய வேலை செய்து வந்தாா். இந்நிலையில், அதிசயமணி வழக்கம்போல் கடந்த புதன்கிழமை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது விஷப்பாம்பு ஒன்று அவரைக் கடித்துள்ளது. இதில், வலி தாங்கமுடியாமல் துடித்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அதிசயமணி உயிரிழந்தாா். இதுகுறித்து குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...