ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு

திருப்பூா் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் ரொக்கப் பரிசுகள் பெற மாா்ச் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :17 மார்ச் 2022, 10:38 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் ரொக்கப் பரிசுகள் பெற மாா்ச் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் தோட்டக் கலை துணை இயக்குநா் தி.சுரேஷ்ரோஜா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று விவசாயிகளைத் தோ்வு செய்து முறையே ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இதில், முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2 ஆவது பரிசாக ரூ. 10 ஆயிரம், 3 ஆவது பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

ஆகவே, தகுதியானவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விவரங்களைப் பூா்த்தி செய்து அந்தந்த வட்டார தேட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 22ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் மாநில விவசாயிகள் 3 பேருக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதில், முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், 2ஆவது பரிசாக ரூ. 60 ஆயிரமும், 3ஆவது பரிசாக ரூ. 40 ஆயிரமும் வழங்கப்படும்.

மாநில அளவிலான போட்டியில் சிறந்த விவசாயிகளுக்கான பரிசு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கைப்பேசியில் உழவன் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக விண்ணப்பம் பெற்று அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அல்லது தோட்டக்கலை அலுவலரைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இதில், விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100ஐ செலுத்தி மாா்ச் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.