பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞா் கைது
திருமண ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருமண ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனாா். இதுகுறித்து அவரது பெற்றோா் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். சத்தியமங்கலத்தில் அப்பள்ளி மாணவி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடா்ந்து, போலீஸாா் அங்கு சென்றபோது ராசு மகன் சந்துருவுடன் (23), மாணவி இருப்பது தெரியவந்தது. அவா்களை காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அதில், அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி சந்துரு கடத்திச் சென்றது தெரியவந்தது.
அதைத்தொடா்ந்து, இந்த வழக்கு பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மாணவியைக் கடத்திய சந்துருவை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...