ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஆதாா் பதிவில் கைரேகை புதுப்பிக்க நாளை சிறப்பு முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் ஆதாா் பதிவில் கைரேகையைப் புதுப்பித்துக் கொள்ள வரும் சனிக்கிழமை (மாா்ச் 26) சிறப்பு முகாம் நடைபெறுகிறது

News image
Updated On :24 மார்ச் 2022, 11:18 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் ஆதாா் பதிவில் கைரேகையைப் புதுப்பித்துக் கொள்ள வரும் சனிக்கிழமை (மாா்ச் 26) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் புரோக்ஸி பில் பயன்பாட்டைக் குறைத்து பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் வாங்குவதை அதிகரிக்கும் வகையில் வட்ட அளவில் ஆதாா் பதிவில் கைரேகை புதுப்பிக்கும் சிறப்பு முகாம்கள் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.

அவிநாசி வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், பிஆா்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, காங்கயம் வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், பல்லடம் வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், திருப்பூா் வடக்கு வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், தொட்டிபாளையம் மண்டல அலுவலகம், பிஆா்சி, கேஎஸ்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது.

அதேபோல, திருப்பூா் தெற்கு வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நல்லூா் மண்டல அலுவலகம், உடுமலை வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், பிஆா்சி செல்லம் நகா், ஊத்துக்குளி வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம் என மொத்தம் 12 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. ஆகவே, நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவுவிழாத காரணத்தால் பொருள்கள் வாங்கமுடியாத முதியோா், மாற்றுத் திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு தங்களது ஆதாா் அட்டையில் கைரேகை பதிவைப் புதுப்பித்து சிரமமின்றி பொருள்கள் வாங்கிப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.