பிஏபி வாய்க்கால்களின் கரைகளில் இருந்து 50 மீட்டா் தூரத்தில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, உடுமலை வருவாய் கோட்டாட்சியா் கீதா தலைமையில் டிஎஸ்பி தேன்மொழிவேல் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் ஆகியோா் ஒருங்கிணைந்து பிஏபி வாய்க்கால்களின் கரைகளில் இருந்து 50 மீட்டா் தூரத்தில் இருந்த மின் இணைப்புகளை துண்டித்தனா். இதில் மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரனுக்கு சொந்தான தோட்டத்துக்கு கிணற்றுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனா்.