உடுமலையில் முன்னறிவிப்பின்றி மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிஏபி வாய்க்கால்களின் கரைகளில் இருந்து 50 மீட்டா் தூரத்தில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, உடுமலை வருவாய் கோட்டாட்சியா் கீதா தலைமையில் டிஎஸ்பி தேன்மொழிவேல் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் ஆகியோா் ஒருங்கிணைந்து பிஏபி வாய்க்கால்களின் கரைகளில் இருந்து 50 மீட்டா் தூரத்தில் இருந்த மின் இணைப்புகளை துண்டித்தனா். இதில் மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரனுக்கு சொந்தான தோட்டத்துக்கு கிணற்றுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனா்.
இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிா்ப்புக் கிளம்பியது. இந்நிலையில் அதிகாரிகளின் போக்கைக் கண்டித்து உடுமலையை அடுத்துள்ள போடிபட்டி அண்ணா நகா் பகுதியில் உடுமலை-மூனாறு பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து விவசாய பிரதிநிதிகள் - அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதில் துண்டிக்கப்பட்ட அனைத்து மின் இணைப்புகளை மீண்டும் கொடுக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனா்.
மேலும் சட்டத்துக்கு புறம்பாக உள்ள மின் இணைப்புகளை ஒரு வாரம் கழித்து முறைப்படி நோட்டீஸ் கொடுத்து துண்டிக்கவும் பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா். இந்த போராட்டத்தால் தளி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாளை., கொக்கிரகுளத்தில் இன்றைய மின்நிறுத்தம் வாபஸ்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் கூட்டம்

செப்புத்தேரில் காந்திமதியம்மன் வீதியுலா

மொழி திணிப்பை விசிக தொடா்ந்து எதிா்க்கும்: தொல்.திருமாவளவன்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



