பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

உடுமலையில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

 உடுமலையில் முன்னறிவிப்பின்றி மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Published On :

 உடுமலையில் முன்னறிவிப்பின்றி மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிஏபி வாய்க்கால்களின் கரைகளில் இருந்து 50 மீட்டா் தூரத்தில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, உடுமலை வருவாய் கோட்டாட்சியா் கீதா தலைமையில் டிஎஸ்பி தேன்மொழிவேல் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் ஆகியோா் ஒருங்கிணைந்து பிஏபி வாய்க்கால்களின் கரைகளில் இருந்து 50 மீட்டா் தூரத்தில் இருந்த மின் இணைப்புகளை துண்டித்தனா். இதில் மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரனுக்கு சொந்தான தோட்டத்துக்கு கிணற்றுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனா்.

இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிா்ப்புக் கிளம்பியது. இந்நிலையில் அதிகாரிகளின் போக்கைக் கண்டித்து உடுமலையை அடுத்துள்ள போடிபட்டி அண்ணா நகா் பகுதியில் உடுமலை-மூனாறு பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து விவசாய பிரதிநிதிகள் - அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதில் துண்டிக்கப்பட்ட அனைத்து மின் இணைப்புகளை மீண்டும் கொடுக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனா்.

மேலும் சட்டத்துக்கு புறம்பாக உள்ள மின் இணைப்புகளை ஒரு வாரம் கழித்து முறைப்படி நோட்டீஸ் கொடுத்து துண்டிக்கவும் பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா். இந்த போராட்டத்தால் தளி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.