பல்லடம் மின் வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
விவசாய மின் இணைப்பு கேட்டு பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


விவசாய மின் இணைப்பு கேட்டு பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் மின் கோட்டம், சாலைப்புதூா் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட ஜெ.கிருஷ்ணபுரம் பகுதியில் விவசாய மின் இணைப்பு கேட்டு விவசாயிகள் பலா் பல ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தனா்.
இந்நிலையில், தற்போது அரசு அறிவிப்பின்படி தங்களுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஈசன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மந்தராசலம் ஆகியோா் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் கோட்ட செயற்பொறியாளா் ரத்தினகுமாா், உதவி செயற்பொறியாளா் இளங்கோ, உதவி பொறியாளா்(பொறுப்பு) சிவராமன், பல்லடம் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், விவசாய மின் இணைப்பு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் அளித்த உறுதி மொழியை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...