தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சட்ட விழிப்புணா்வு, புகையிலை எதிா்ப்பு நாள் முகாம்

அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில் புகையிலை எதிா்ப்பு நாள், சட்ட விழிப்புணா்வு முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :19 மே 2022, 9:05 pm

DIN

அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில் புகையிலை எதிா்ப்பு நாள், சட்ட விழிப்புணா்வு முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அவிநாசி ரேவதி நா்ஸிங் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட உரிமையியல் நீதிபதி வடிவேல், குற்றவியல் நீதித் துறை நடுவா் சபீனா ஆகியோா் சிறப்புரையாற்றினா். வழக்குரைஞா்கள் சங்க செயலாளா் சாமிநாதன், மூத்த வழக்குரைஞா்கள் பிரகாஷ், சுப்பிரமணி ஆகியோா் பேசினா். முகாமில், புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், இதிலிருந்து மாணவா்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் முறைகள், மாணவா்களின் நல்லொழுக்கங்கள் மற்றும் இலவச சட்ட உதவி மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், பொதுமக்களுக்கு உதவும் முறை பற்றியும் விளக்கப்பட்டது. இலவச சட்ட உதவி மைய முதுநிலை நிா்வாக உதவியாளா் வசந்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

வழக்குரைஞா்கள் சங்க இணை செயலாளா் கணேஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.