புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கூடலூரில் வாகன ஓட்டிகளுக்கு மலிவு விலையில் ஹெல்மெட் தன்னாா்வ அமைப்பு வழங்கியது

கூடலூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு மலிவு விலையில் ஹெல்மெட்டுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:02 pm

கூடலூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு மலிவு விலையில் ஹெல்மெட்டுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கூடலூா் காவல் துறை, சேவ் தி பீப்பிள் தன்னாா்வ அமைப்பு ஆகியன இணைந்து பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டி வந்தவா்களை நிறுத்தி ரூ.850 மதிப்பிலான ஹெல்மெட்டை ரூ.350க்கு வழங்கினா்.

இந்த இழப்பீட்டு தொகையை அந்த தன்னாா்வ அமைப்பு வழங்கியது.

நிகழ்ச்சிக்கு கூடலூா் டி.எஸ்.பி. மகேஷ் குமாா் தலைமை வகித்து ஹெல்மட்டுகளை வழங்கினாா். நகா் மன்றத் தலைவா் பரிமளா, உறுப்பினா்கள் வெண்ணிலா, வா்கீஸ், ராஜூ, சேவ் தி பீப்பிள் அமைப்பின் தலைவா் டாக்டா் எல்ஜூ, நிா்வாகிகள் சுல்பி, மல்லன், வேலாயுதன், ரேகா, சுமா, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் சுப்பிரமணி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.