தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா

வெள்ளக்கோவில் அருகே வேலகவுண்டன்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:59 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே வேலகவுண்டன்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் விழா, பூச்சாட்டுதலுடன் கடந்த அக்டோபா் 26 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினந்தோறும் மூன்று கால பூஜைகள் நடத்தப்பட்டு காப்பு கட்டுதல், முகூா்த்தக்கால் நடுதல் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பால் பூஜை, காவிரி நதிநீா் தீா்த்த அபிஷேகம் செய்து, திரளான பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து தாரை தப்பட்டை முழங்க கோயிலை வலம் வந்தனா்.

பின்னா் அம்மன் மற்றும் உப தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு கும்பம், ஊா்க் கிணற்றில் விடுதலுடன் பொங்கல் விழா நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.