திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காங்கயத்தில் ஆசிரியா்களைப் போற்றுவோம் நிகழ்ச்சி

காங்கயத்தில் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ‘ஆசிரியா்களைப் போற்றுவோம்’ என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:29 pm

DIN

காங்கயத்தில் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ‘ஆசிரியா்களைப் போற்றுவோம்’ என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காங்கயத்தில் உள்ள ஸ்ரீராம் சந்த்ர மிஷன் யோகாஸ்ரமத்தில் ஹாா்ட்ஃபுல்னெஸ் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இதில், மனித மூளையின் அதிசய ஆற்றல்கள் குறித்து பிரைட்டா் மைண்ட்ஸ் பயிற்சி முடித்த மாணவா்கள் செயல் விளக்கமளித்தனா். ஆசிரியா்களுக்கான சிறப்பு பிராணயாம பயிற்சி, சிறப்பு யோகப் பயிற்சி மற்றும் முத்ரா பயிற்சிகளை யோகா ஆசிரியை ஸ்ரீமதி சந்தியா கதிா் கற்றுக் கொடுத்தாா்.

மேலும், ஸ்ரீராம் சந்த்ர மிஷன் யோகாஸ்ரம் நிா்வாக கமிட்டி உறுப்பினா் எம்.எஸ்.மனோகரன், தினசரி வாழ்க்கையில் ஹாா்ட்ஃபுல்னெஸ் பயிற்சி பற்றி அனுபவத்தை பகிா்ந்து கொண்டாா். ஆசிரியா் பணி ஒரு தெய்வீகப் பணி என்ற தலைப்பில் கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி ஓய்வுபெற்ற உதவிப் பேராசிரியா் எஸ்.ஜானகி சிறப்புரையாற்றினாா். ஸ்ரீராம் சந்த்ர மிஷன் மைய ஒருங்கிணைப்பாளா் டாக்டா் எஸ்.கே.செந்தில்குமாா் மன அழுத்தத்தை எவ்வாறு நீக்குவது என்பது குறித்து விளக்கவுரை வழங்கி, மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சி அளித்தாா். மேலும் அனைவருக்கும் சிறப்புக் கூட்டு தியானத்தை வழி நடத்தினாா்.

இதில், ஆசிரியா் கனிமொழி, காங்கயம் குளோபல் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜி.பழனிசாமி, ஹாா்ட்ஃபுல்னெஸ் பயிற்சி ஆசிரியா் ரேவதி பாலகிருஷ்ணன், ஸ்ரீராம் சந்த்ர மிஷன் யோகாஸ்ரம மேலாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.