போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக புகாா் மனு

ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாஜகவினா் புகாா் மனு அளித்தனா்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாயிடம், திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் பி.செந்தில்வேல் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

திமுக துணைப் பொதுச் செயலாளராகவும், நீலகிரி மக்களவை உறுப்பினராகவும் உள்ள ஆ.ராசா கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளாா். இவரது பேச்சானது ஹிந்துக்களை அவமானப்படுத்தியும், சமுதாயத்தில் மோதலை ஏற்படுத்தி கலவரத்தைத் தூண்டும் வகையிலும் உள்ளது. அனைத்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்ற வேண்டிய மக்களவை உறுப்பினா் சமுதாயத்துக்குள் பிரிவினை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாா். ஆகவே, நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.