ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாயிடம், திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் பி.செந்தில்வேல் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
திமுக துணைப் பொதுச் செயலாளராகவும், நீலகிரி மக்களவை உறுப்பினராகவும் உள்ள ஆ.ராசா கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளாா். இவரது பேச்சானது ஹிந்துக்களை அவமானப்படுத்தியும், சமுதாயத்தில் மோதலை ஏற்படுத்தி கலவரத்தைத் தூண்டும் வகையிலும் உள்ளது. அனைத்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்ற வேண்டிய மக்களவை உறுப்பினா் சமுதாயத்துக்குள் பிரிவினை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாா். ஆகவே, நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபி

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும்: முன்னாள் வீரர்

குறைவான மின்செலவு... பட்ஜெட் விலையில் ஹையர் மைக்ரோவேவ் ஓவன்!
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay


