அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

காங்கேயம் அருகே பேருந்து மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி: 3 பேர் கவலைக்கிடம்

காங்கேயம் அருகே கொடுவாய் பகுதியில் பேருந்து மீது கார் மோதி, காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News image
விபத்துக்குள்ளான பேருந்து-கார்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:58 am

DIN

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கொடுவாய் பகுதியில் பேருந்து மீது கார் மோதி, காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று வியாழக்கிழமை மாலை பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் சூலூர் செல்வதற்காக ஒரு காரில் தாராபுரத்தில் இருந்து அவிநாசிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மாலை 3.45 மணியளவில், கொடுவாய்-சக்திவிநாயகபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சூலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்த கார், 4 வழிச் சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதி, பின்னர் எதிரே பழனி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் முன்புறம் மீது மோதியது.

Story image

இந்த விபத்தில் கார் முற்றிலுமாக உருக்குலைந்து, காரில் பயணித்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறின. இதில், காரில் பயணித்த வீரக்குமார் (31), முருகேசன் (32), சஜீத் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், காரில் வந்த மகேஷ்குமார், கிஷோர்குமார் மற்றும் மேலும் ஒருவர் என 3 பேர் மீட்கப்பட்டு, படுகாயங்களுடன் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.