திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

சாவக்கட்டுபாளையத்தில் விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்

அவிநாசி அருகே சாவக்கட்டு பாளையத்தில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போரட்டத்தில் வியாழக்கிழமை  ஈடுபட்டனர்.

News image
சாவக்கட்டுபாளையத்தில் விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:08 pm

DIN

அவிநாசி: அவிநாசி அருகே சாவக்கட்டு பாளையத்தில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போரட்டத்தில் வியாழக்கிழமை  ஈடுபட்டனர்.

கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150 வழங்க வேண்டும், கள் விற்க அனுமதிக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். நியாய விலைக் கடையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். பாமாயில் இறக்குமதி தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் சிதறு தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு அவிநாசி வடக்கு  ஒன்றிய பகுதி தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் ஒன்றிய தலைவர் பிகேஎஸ். வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் கண்டன உரையாற்றினார். வடக்கு ஒன்றிய பகுதி பொறுப்பாளர் ரத்தினசாமி நன்றி தெரிவித்தார்.

இறுதியாக போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் விவசாயிகளின் விலை பொருள்கள்  உற்பத்தியை நிறுத்த உள்ளதாக தெரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.