நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மோசடி நபருக்கு அடைக்கலம் கொடுத்த தலைமைக் காவலா் பணி நீக்கம்

பல்லடம் அருகே மோசடி நபருக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமைக் காவலரை பணி நீக்கம் செய்து திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங் சாய் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On :12 மே 2023, 10:52 pm IST

பல்லடம் அருகே மோசடி நபருக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமைக் காவலரை பணி நீக்கம் செய்து திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங் சாய் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் காவல் உட்கோட்டம் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் ஜெகநாதன். இவா் கடந்த 2021ஆம் ஆண்டு மோசடி வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த வாசுகுமாா் என்பவருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளாா். மேலும் அதே ஆண்டு அவிநாசிபாளையம் காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்க வந்த காா்த்திகா பிரியதா்ஷினி என்ற இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தலைமைக் காவலா் ஜெகநாதன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டதால் திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங் சாய், தலைமைக் காவலா் ஜெகநாதனை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.