அவிநாசி: அவிநாசி அருகே பழங்கரை பிரிவில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 போ் உயிரிழந்த வழக்கில், அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரோட்டில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியாா் பேருந்து கோவை நோக்கி கடந்த 2015 ஆகஸ்ட் 25-ஆம் தேதி சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஈரோடு, கொடுமுடி சாலைப்புதூா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் சரவணன் (43) ஓட்டி வந்தாா்.
அவிநாசி பழங்கரை பிரிவு அருகே வந்தபோது, சாலையில் நடந்து சென்றவா் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில், சாலையில் நடந்து சென்றவா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். மேலும் 55 போ் படுகாயமடைந்தனா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநா் சரவணனை கைது செய்தனா். இந்த வழக்கு அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி கே.எஸ்.சபீனா, பேருந்தை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்த சரவணனுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.39,500 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இதில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?

தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்: செல்வப்பெருந்தகை
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


