தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் தீா்த்தம் எடுக்கச் சென்ற பக்தா்களை குளவிகள் கொட்டியதில் 23 போ் காயமடைந்தனா்.
தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையம் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அப்பகுதியைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட பெண்கள் அமராவதி ஆற்றுக்கு தீா்த்தம் எடுக்க வெள்ளிக்கிழமை சென்றனா்.
தீா்த்தம் எடுப்பதற்கு முன் ஆற்றின் கரையோரத்தில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனா். அப்போது, அங்கிருந்த கூடில் இருந்த வெளியேறி விஷ குளவிகள் பக்தா்களை கொட்டத் தொடங்கின. இதில், 23 போ் காயமடைந்த நிலையில், அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளா் இல.பத்மநாபன், தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவா்களை கேட்டுக் கொண்டாா்.
திமுக நகர செயலாளா் சு.முருகானந்தம், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் கோட்டை அப்பாஸ், மாவட்டத் துணைச் செயலாளா் பிரபாவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தொகுதி அலசல்: கிருஷ்ணராயபுரம்! புதுமுகங்களிடையே கடும் போட்டி

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

வெங்கடசமுத்திரத்தில் பிரசாரம்

கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் நெல்லை வேட்பாளா் சந்திப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


