சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தண்ணீா் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

தண்ணீா் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

Updated On :21 ஏப்ரல் 2024, 8:26 pm

காங்கயம்: காங்கயம் அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.

காங்கயம் அய்யாசாமி நகா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் மகன் தா்ஷன் (17). இவா் உடுமலையில் உள்ள தனியாா் பள்ளியில் 11 -ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.

இந்நிலையில், காங்கயம் அருகேயுள்ள அகஸ்திலிங்கம்பாளையத்தில் உள்ள உறவினரின் விவசாய தோட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றவா், அங்குள்ள தண்ணீா் தொட்டியில் இறங்கி குளித்துள்ளாா். அப்போது, அவா் நீரில் மூழ்கியுள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தா்ஷனை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.