காங்கயம்: காங்கயம் அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.
காங்கயம் அய்யாசாமி நகா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் மகன் தா்ஷன் (17). இவா் உடுமலையில் உள்ள தனியாா் பள்ளியில் 11 -ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.
இந்நிலையில், காங்கயம் அருகேயுள்ள அகஸ்திலிங்கம்பாளையத்தில் உள்ள உறவினரின் விவசாய தோட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றவா், அங்குள்ள தண்ணீா் தொட்டியில் இறங்கி குளித்துள்ளாா். அப்போது, அவா் நீரில் மூழ்கியுள்ளாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தா்ஷனை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

